என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்: மகளிரணி கூட்டத்தில் தீர்மானம்
Byமாலை மலர்24 Aug 2018 2:24 AM GMT (Updated: 24 Aug 2018 2:24 AM GMT)
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்று தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DMK #MKStalin
சென்னை :
தி.மு.க. மகளிரணி மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழ்ச் சமுதாயம் விழிப்புடன் இருக்க தன் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்த தலைவர் கருணாநிதி, தன் அண்ணனான அண்ணாவுக்கு அருகில் விழி மூடி, ஓய்வு கொண்டிருக்கிறார். அவர் வழியில், அவர் விட்டுச் சென்ற பணிகளை தொய்வின்றி தொடர்வோம், ஒற்றுமையோடு தி.மு.க.வை காப்போம் என அவர் நினைவு போற்றி உறுதி எடுப்போம்.
* மறைந்த முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு இரங்கலை தெரித்துக்கொள்கிறோம்.
* கேரள பெருவெள்ளத்தில் சிக்கி பலியான நூற்றுக்கணக்கானோரின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
* தலைவர் கருணாநிதியின் வழிநின்று தி.மு.க.வின் வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ் மொழியின் மேன்மைக்காகவும் மு.க.ஸ்டாலின் அயராது உழைப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.
அத்தனைக்கும் மேலாக ஓய்வின்றி உழைக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தி.மு.க. மகளிரணி உளமார விரும்புகிறது, முன்மொழிகிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #DMK #MKStalin
தி.மு.க. மகளிரணி மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழ்ச் சமுதாயம் விழிப்புடன் இருக்க தன் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்த தலைவர் கருணாநிதி, தன் அண்ணனான அண்ணாவுக்கு அருகில் விழி மூடி, ஓய்வு கொண்டிருக்கிறார். அவர் வழியில், அவர் விட்டுச் சென்ற பணிகளை தொய்வின்றி தொடர்வோம், ஒற்றுமையோடு தி.மு.க.வை காப்போம் என அவர் நினைவு போற்றி உறுதி எடுப்போம்.
* பா.ஜ.க. ஒப்பற்ற தலைவரும், முன்னாள் பிரதமரும், அனைவராலும் போற்றப்படும் மனிதநேயம் கொண்ட மனிதரும், தலைவர் கருணாநிதியின் உற்ற நண்பருமான அடல் பிகாரி வாஜ்பாய் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
* மறைந்த முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு இரங்கலை தெரித்துக்கொள்கிறோம்.
* கேரள பெருவெள்ளத்தில் சிக்கி பலியான நூற்றுக்கணக்கானோரின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
* தலைவர் கருணாநிதியின் வழிநின்று தி.மு.க.வின் வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ் மொழியின் மேன்மைக்காகவும் மு.க.ஸ்டாலின் அயராது உழைப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.
அத்தனைக்கும் மேலாக ஓய்வின்றி உழைக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தி.மு.க. மகளிரணி உளமார விரும்புகிறது, முன்மொழிகிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #DMK #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X