என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண்ருட்டியில் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
Byமாலை மலர்24 Aug 2018 10:55 AM GMT (Updated: 24 Aug 2018 10:55 AM GMT)
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தகாத வார்த்தைகளால் திட்டி ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பரமசிவம். இவர் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஆஸ்பத்திரிக்கு மணம்தளர்ந்தபுத்தூர் பகுதியை சேர்ந்த பரதன் (வயது 28), பிரபாகரன் (25) ஆகியோர் வந்தனர்.
அவர்கள் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு முன்பு நின்று கொண்டு ஆஸ்பத்திரி ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு இருந்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பரமசிவம் அங்கு சென்று அந்த 2 பேரிடமும், இந்த இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள். உடனே இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறினார்.
ஆனால், பரதனும், பிரபாகரனும் அதனை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்கும், ஏட்டு பரமசிவத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த பரதன், பிரபாகரன் ஆகிய 2 பேரும் ஏட்டு பரமசிவத்தை தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டலும் விடுத்தனர்.
இது குறித்து ஏட்டு பரமசிவம் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவாது உசேன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரபாகரன், பரதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பரமசிவம். இவர் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஆஸ்பத்திரிக்கு மணம்தளர்ந்தபுத்தூர் பகுதியை சேர்ந்த பரதன் (வயது 28), பிரபாகரன் (25) ஆகியோர் வந்தனர்.
அவர்கள் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு முன்பு நின்று கொண்டு ஆஸ்பத்திரி ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு இருந்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பரமசிவம் அங்கு சென்று அந்த 2 பேரிடமும், இந்த இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள். உடனே இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறினார்.
ஆனால், பரதனும், பிரபாகரனும் அதனை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்கும், ஏட்டு பரமசிவத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த பரதன், பிரபாகரன் ஆகிய 2 பேரும் ஏட்டு பரமசிவத்தை தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டலும் விடுத்தனர்.
இது குறித்து ஏட்டு பரமசிவம் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவாது உசேன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரபாகரன், பரதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X