search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டையார்பேட்டையில் நடுரோட்டில் வீசப்பட்ட குழந்தையின் பிணம்
    X

    தண்டையார்பேட்டையில் நடுரோட்டில் வீசப்பட்ட குழந்தையின் பிணம்

    தண்டையார்பேட்டையில் நடுரோட்டில் வீசப்பட்ட குழந்தையின் பிணத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராயபுரம், ஆக.25-

    தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 6-வது தெரு வில் இன்று காலை 6.30 மணியளவில் நடுரோட்டில் பிறந்து சில மணி நேரம் ஆன பச்சிளம் ஆண் குழந்தை கீழே கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குழந்தையை எடுத்தனர்.

    அப்போது அக்குழந்தை இறந்து இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பச்சிளம் குழந்தை உடலை நடுரோட்டில் வீசியது யார்? என்று தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    அப்பகுதியை சேர்ந்த யாராவது குழந்தை உடலை வீசினார்களா? அல்லது வேறு பகுதியில் இருந்து வந்து வீசி சென்றார்களா? அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவில் குழந்தையை வீசியவர்கள் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

    சமீபத்தில் வளசரவாக்கத் தில் சாக்கடைக்குள் வீசப் பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது சம்பவமாக தண் டையார்பேட்டையில் குழந் தையின் உடல் நடு ரோட்டில் வீசப் பட்டிருப் பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×