search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மாங்காடு அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    மாங்காடு அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    மாங்காடு அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கம் சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    ராஜ்குமாரும், அவரது மனைவி கலைச்செல்வியும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். திடீரென ராஜ்குமார் கண் விழித்தபோது வீட்டுக்குள் யாரோ ஒருவர் நடமாடுவது போல தெரிந்தது.

    உடனே திருடன் திருடன் என்று கணவன்-மனைவி இருவரும் அலறினார்கள். அப்போது வாலிபர் ஒருவர் வெளியே ஓடினார். சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

    வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்து 11 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம்.

    Next Story
    ×