search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் வழங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
    X

    குடிநீர் வழங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

    திருவாடானை அருகே குடிநீர் வழங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பாரதிநகரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    பாரதிநகரில் 9 வீதிகள் உள்ளன. ஒவ்வொரு வீதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு குழாய் இணைப்புகள் இல்லை.

    ஏற்கனவே இருந்த தெரு குடிநீர் குழாய்களில் ஒவ்வொருவரும் வீட்டிற்கு குடிநீர் இணைப்பை எடுத்து சட்டத்திற்கு புறம்பாக மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினர்.

    பல்வேறு புகார்களை அடுத்து ஒவ்வொரு வீதிக்கு முன்பு 500 லிட்டர் சின்டக்ஸ் தொட்டி அமைத்து அதன் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் ஏற்பாடு செய்தது.

    எனினும் அதன் மூலம் அந்தப்பகுதியில் உள்ள அனைவருக்கும் குடி நீர் கிடைக்கவில்லை. எனவே தற்போது குடிநீர் வழங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் தண்ணீர் வரும் போது முதலில் வருபவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. வரிசையாக பிடித்துவரும் நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை.

    எனவே கூடுதலான நேரம் தண்ணீர் வழங்கும் பட்சத்தில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ஏதுவாக இருக்கும். இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இந்த பகுதியில் குடியிருக்க முடியாமால் வேறு ஊருக்கு குடி பெயரவாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×