search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமனார் தவறாக நடக்க முயன்றதால் கிணற்றில் குதித்த இளம்பெண்
    X

    மாமனார் தவறாக நடக்க முயன்றதால் கிணற்றில் குதித்த இளம்பெண்

    நாட்டறம்பள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மாமனார் தவறாக நடக்க முயன்றதால் அந்த பெண் கிணற்றில் குதித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளியை அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். திருப்பதி, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இளம்பெண் இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வர்யாவிடம், மாமனார் கோவிந்தன் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா அவரிடம் இருந்து தப்பி ஓடி, அருகே உள்ள கிணற்றில் குதித்தார். இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஐஸ்வர்யாவை உயிருடன் மீட்டனர்.

    பின்னர் அவர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கோவிந்தன் மீது நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×