என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெரினாவில் மோட்டார் சைக்கிள் நிறுத்த கட்டணம் - மாநகராட்சி திட்டம்
Byமாலை மலர்27 Aug 2018 10:23 PM GMT (Updated: 27 Aug 2018 10:23 PM GMT)
சென்னையில் சுற்றுலாதளமாக திகழும் மெரினா கடற்கரையில் மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. #MerinaBeach #ParkingFee
சென்னை:
சென்னையில் சுற்றுலாதளமாக திகழும் மெரினா கடற்கரைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக மெரினா கடற்கரை உட்புற சாலைகளில் கார்கள், வேன்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது.
தற்போது கார்கள் போன்ற கனரக வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 ஆக உயர்த்தவும், மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக வாகனங்கள் நிறுத்தத்தை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியும், காவல்துறையும் இணைந்து சென்னை நகரில் 375 இடங்களில் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்த கமிட்டி ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த கமிட்டி எந்தெந்த இடங்களில் பார்க்கிங் வசதியை அமைக்கலாம் என்று ஆய்வு செய்து அறிக்கை தருவார்கள். அதன் ஒரு கட்டமாகவே மெரினா, எலியட்ஸ் உள்பட கடற்கரைகளில் கார்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தவும், மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் சுற்றுலாதளமாக திகழும் மெரினா கடற்கரைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக மெரினா கடற்கரை உட்புற சாலைகளில் கார்கள், வேன்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது.
தற்போது கார்கள் போன்ற கனரக வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 ஆக உயர்த்தவும், மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக வாகனங்கள் நிறுத்தத்தை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியும், காவல்துறையும் இணைந்து சென்னை நகரில் 375 இடங்களில் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்த கமிட்டி ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த கமிட்டி எந்தெந்த இடங்களில் பார்க்கிங் வசதியை அமைக்கலாம் என்று ஆய்வு செய்து அறிக்கை தருவார்கள். அதன் ஒரு கட்டமாகவே மெரினா, எலியட்ஸ் உள்பட கடற்கரைகளில் கார்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தவும், மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X