search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டறம்பள்ளி அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபருக்கு அடி,உதை
    X

    நாட்டறம்பள்ளி அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபருக்கு அடி,உதை

    நாட்டறம்பள்ளி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பக்கிரி மடம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22) கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே நேற்று மாலை 7 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.

    விக்னேஷ் சிறுமியிடம் பேசி வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். பயந்து போன சிறுமி அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விக்னேஷ் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த விக்னேசை அடித்து உதைத்து சிறுமியை மீட்டனர்.

    பின்னர் விக்னேஷை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நாட்டறம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×