search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுகவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது - துரைமுருகன்
    X

    திமுகவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது - துரைமுருகன்

    திமுகவில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக பொதுக்குழுவில் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசினார். #DMK #DuraiMurugan #DMKThalaivarStalin
    சென்னை:

    சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசியதாவது:-

    உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கருணாநிதி. சிவப்பு கம்பளத்தில் நடந்து அவர் பதவியில் அமரவில்லை. சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார்.

    தி.மு.கவின் பேச்சாளர் என்பதிலே தான் எனக்கு பெருமை. சிறுவனாக பார்த்து என் கண்முன் வளர்ந்தவர் இன்று தலைவராகி இருக்கிறார். தம்பி என அழைத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று என் மரியாதைக்குரிய தலைவர்.



    தி.மு.கவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. கட்சியை காப்பாற்ற சரியான ஆள் ஸ்டாலின்  தான். கருணாநிதியே கொடுத்த பதவியாக கருதி ஏற்கிறேன். பொருளாளர் வேலை நிதி சேகரிப்பது தான், நிதி கொடுங்கள்... இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #DMK #DuraiMurugan #DMKThalaivarStalin
    Next Story
    ×