என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
அபிராமபுரம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை
சென்னை:
அபிராமபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்.
அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் துப்பு துலக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட கார் அடிக்கடி கொள்ளை போன பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக வலம் வந்தது தெரிய வந்தது.
அதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி சீனிவாசன், மாரிமுத்து, சங்கர், ராஜேஷ், லட்சுமணன் குமார், நாகூர் கனி ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களில் நாகூர் கனி திருட்டு நகைகளை வாங்கியவர் என்பது தெரிய வந்தது. கொள்ளையர்களிடம் இருந்து 70 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளையர்கள் சொகுசு காரில் பகல் நேரத்தில் அந்த பகுதியில் வலம் வந்து நோட்டமிட்டுள்ளனர். பகல் முழுவதும் சுற்றி வரும் அவர்கள் இரவு நேரத்தில் பூட்டிக்கிடக்கும் வீடுகள் எது என்பதை கண்டுபிடித்து அந்த வீடுகளில் மட்டும் கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்