என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம்
Byமாலை மலர்29 Aug 2018 11:31 AM GMT (Updated: 29 Aug 2018 11:31 AM GMT)
ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தன.
ஈரோடு:
அந்தியூர் அருகே உள்ள பட்லூர் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 21). பி.இ. பட்டதாரி. ஈரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (23). பட்டதாரி.
இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடி ஆனந்தன், கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சேலம் மாவட்டம் மேட்டூர் முனியப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பிறகு அங்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதே போல மேலும் 2 காதல் ஜோடிகள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
ஒரே நாளில் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.
அந்தியூர் அருகே உள்ள பட்லூர் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 21). பி.இ. பட்டதாரி. ஈரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (23). பட்டதாரி.
இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடி ஆனந்தன், கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சேலம் மாவட்டம் மேட்டூர் முனியப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பிறகு அங்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதே போல மேலும் 2 காதல் ஜோடிகள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
ஒரே நாளில் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X