என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொட்டியத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்31 Aug 2018 2:48 PM GMT (Updated: 31 Aug 2018 2:48 PM GMT)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொட்டியத்தில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் சத்திய வாணி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் முத்து கண்ணு, சாரதாம்பாள், ஜெயா, சுமதி ஆகியோர்முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வி கோரிக்கை குறித்து விளக்கவுரையாற்றினார். சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் தங்கராஜ், பழனி, மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக்கி கால முறை ஊதியம் வழங்கவேண்டும், பணிக்கொடை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள்பற்றி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தனலட்சுமி வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரோஜா நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X