என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கார் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை
Byமாலை மலர்1 Sep 2018 5:40 PM GMT (Updated: 1 Sep 2018 5:40 PM GMT)
வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுனிலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து நீதிபதி லதா தீர்ப்பளித்தார்.
கோவை:
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சுனில் (வயது 27), கார் டிரைவர். இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி அருகே உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வரும் நிதிநிறுவன அதிபர் மாரிமுத்து என்பவரின் வீட்டிற்குள் புகுந்து அவருடைய மனைவி அகிலாண்டேஸ்வரியை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்றார். உடனே அகிலாண்டேஸ்வரி சத்தம்போட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சுனில் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்த புகாரின்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சுனிலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து நீதிபதி லதா தீர்ப்பளித்தார். உடனே போலீசார் பலத்த பாதுகாப்புடன் சுனிலை அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சுனில் (வயது 27), கார் டிரைவர். இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி அருகே உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வரும் நிதிநிறுவன அதிபர் மாரிமுத்து என்பவரின் வீட்டிற்குள் புகுந்து அவருடைய மனைவி அகிலாண்டேஸ்வரியை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்றார். உடனே அகிலாண்டேஸ்வரி சத்தம்போட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சுனில் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்த புகாரின்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சுனிலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து நீதிபதி லதா தீர்ப்பளித்தார். உடனே போலீசார் பலத்த பாதுகாப்புடன் சுனிலை அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X