search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஸ்டாலினுக்கு எதிராக கறுப்பு கொடி -பா.ஜனதா அறிவிப்பு
    X

    ஸ்டாலினுக்கு எதிராக கறுப்பு கொடி -பா.ஜனதா அறிவிப்பு

    பாரதீய ஜனதா கட்சிக்கு எதிர் கருத்து கூறிவரும் ஸ்டாலின் புதுவை வரும் போது பா.ஜ.க. வினரால் கறுப்பு கொடி காட்டப்படும் என்று சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #mkstalin

    புதுச்சேரி:

    புதுவை மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் தலைவர்களுக்கு சகிப்பு தன்மை வேண்டும் என்று கூறி உள்ளார். அதை பாரதீய ஜனதா கட்சி வரவேற்கிறது. இனி நாராயணசாமி செல்லும் புதுவை மற்றும் பிற மாநிலங்களில் அவருக்கு எதிராக கோ‌ஷம் போட்டால் அவர் பொறுத்துக் கொள்வார் என்று நம்புகிறோம். பாரதீய ஜனதா கட்சிக்கு எதிர் கருத்து கூறிவரும் ஸ்டாலின் புதுவை வரும் போது பா.ஜ.க. வினரால் கறுப்பு கொடி காட்டப்படும்.

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சினை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறோம். தேச விரோத சக்திக்கு தொடர்ந்து நாராயணசாமி ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் 4½ ஆண்டு கால சாதனைகளை மறைக்க மக்களை திசை திருப்பி எதிர் கட்சிகள் தொடர்ந்து வேலை செய்து வருகிறது. மேலும் தேச விரோதிகளை இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாராயணசாமி பதவிக்காக தன்மானம் அனைத்தும் இழக்கலாம் ஆனால் மற்ற தலைவர்கள் அவரை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. முதல் -அமைச்சரின் பேச்சால் தேசவிரோத சக்திகளின் புகலிடமாக புதுவை மாறி வருகிறது. பாரதீய ஜனதா கட்சியை எந்த சக்தியாலும் வீழ்த்திட முடியாது. மன்னர் ஆட்சியோ, வாரிசுஆட்சியோ, ஜாதி அரசியலோ பாரதீய ஜனதா கட்சியை நடத்தவில்லை.

    இவ்வாறு சாமிநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து முன்னணி இயக்கத்தில் செயல்பட்டு வரும் முக்கிய மாநில மற்றும் மாவட்ட தலைவர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறார்கள்.

    தற்போது புதுவையிலும் இதே போன்ற கொலை செயலை அறங்கேற்ற உள்ளதாக மத்திய உளவுத்துறை புதுவை மாநில காவல் துறைக்கு சுட்டி காட்டி வரு கிறது. புதுவையில் இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் படுகொலை செய்வதற்காக இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி வருவதாக புதுவை காவல் துறைக்கு மத்திய உளவுத்துறை ஒரு கோப்பு அனுப்பியுள்ளது.

    இது சம்பந்தமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் புதுவை காவல் துறை மெத்தனமாகவும், மெண்மையான போக் கோடும் செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை என்ற அசம்பாவிதம் நடை பெறுவதற்கு முன்பு புதுவை மாநில தலைவர் சனில் குமார் அவரின் உயிரை பாதுகாக்கும் வகையில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி அவரை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு சாமிநாதன் அறிக்கையில் கூறியுள்ளார். #mkstalin

    Next Story
    ×