என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இந்தியாவிலேயே புதுவையில் தான் தற்கொலை அதிகம்- தேசிய மனநிலை திட்ட அதிகாரி தகவல்
Byமாலை மலர்11 Sep 2018 10:35 AM GMT (Updated: 11 Sep 2018 10:35 AM GMT)
இந்தியாவிலேயே புதுவையில் தான் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய மனநிலை திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் தேசிய மனநல திட்டத்தின் சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதனையொட்டி நலவழித்துறை அலுவலகத்திலிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மருத்துவ மாணவர்கள் நடத்தினார்கள். பேரணியை மனநல திட்டத்தின் திட்ட அதிகாரி டாக்டர் ஜவகர் கென்னடி தொடங்கி வைத்தார் .
பின்னர் அவர் பேசும் போது, ”இந்தியாவிலேயே புதுவையில் தான் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மாதத்திற்கு 75 முதல் 100 பேர் வரை தற்கொலை செய்கின்றனர். மன அழுத்தமே தற்கொலைக்கு காரணியாக உள்ளது. தற்கொலைக்களை தடுக்கவே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்‘ என்றார்.
பேரணியில் பங்கேற்ற மருத்துவ மாணவர்கள் தற்கொலை எதிர்ப்பு பதாகை களை ஏந்தி சென்றனர். மேலும் தற்கொலைக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
நகரப்பகுதியில் தற்கொலைக்கு எதிர்ப்பான துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினர். #tamilnews
புதுவை அரசின் தேசிய மனநல திட்டத்தின் சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதனையொட்டி நலவழித்துறை அலுவலகத்திலிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மருத்துவ மாணவர்கள் நடத்தினார்கள். பேரணியை மனநல திட்டத்தின் திட்ட அதிகாரி டாக்டர் ஜவகர் கென்னடி தொடங்கி வைத்தார் .
பின்னர் அவர் பேசும் போது, ”இந்தியாவிலேயே புதுவையில் தான் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மாதத்திற்கு 75 முதல் 100 பேர் வரை தற்கொலை செய்கின்றனர். மன அழுத்தமே தற்கொலைக்கு காரணியாக உள்ளது. தற்கொலைக்களை தடுக்கவே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்‘ என்றார்.
பேரணியில் பங்கேற்ற மருத்துவ மாணவர்கள் தற்கொலை எதிர்ப்பு பதாகை களை ஏந்தி சென்றனர். மேலும் தற்கொலைக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
நகரப்பகுதியில் தற்கொலைக்கு எதிர்ப்பான துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X