என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் புதிய சிகிச்சை மையங்கள் - அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்
Byமாலை மலர்16 Sep 2018 5:00 PM GMT (Updated: 16 Sep 2018 5:00 PM GMT)
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கண்ணுக்கான புதிய சிகிச்சை மையங்களை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
சிவகங்கை:
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய சிகிச்சை மையங்கள் மற்றும் பொது சுகாதார வளாகங்கள் திறப்பு விழா, கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு பி.ஆர்.செந்தில் நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி புதிதாக தொடங்கப்பட்டுள்ள 14 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவு மையம், 25 படுக்கைகள் கொண்ட கண் அறுவை சிகிச்சை பிரிவு மையம், 20 படுக்கைகள் கொண்ட சிறு நீரக அறுவை சிகிச்சை பிரிவு மையம் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதன்பிறகு அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது:- சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறந்து விளங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். ஆனாலும் இங்குள்ள மருத்துவமனையில் மதுரை, சென்னை உள்ளிட்ட வளர்ந்த நகரங்களுக்கு ஈடாக நவீன உபகரணங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டு மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் பெரியாறு பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா, உறைவிட டாக்டர் மகேந்திரன், நிலைய அலுவலர் குழந்தை ஆனந்தன், துணை நிலை அலுவலர் ராஜராஜன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வக்குமாரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன், நகர செயலாளர் ஆனந்தன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். மேலும் 26 பேருக்கு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் எந்திரங்களையும் அவர் வழங்கினார்.
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய சிகிச்சை மையங்கள் மற்றும் பொது சுகாதார வளாகங்கள் திறப்பு விழா, கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு பி.ஆர்.செந்தில் நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி புதிதாக தொடங்கப்பட்டுள்ள 14 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவு மையம், 25 படுக்கைகள் கொண்ட கண் அறுவை சிகிச்சை பிரிவு மையம், 20 படுக்கைகள் கொண்ட சிறு நீரக அறுவை சிகிச்சை பிரிவு மையம் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதன்பிறகு அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது:- சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறந்து விளங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். ஆனாலும் இங்குள்ள மருத்துவமனையில் மதுரை, சென்னை உள்ளிட்ட வளர்ந்த நகரங்களுக்கு ஈடாக நவீன உபகரணங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டு மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் பெரியாறு பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா, உறைவிட டாக்டர் மகேந்திரன், நிலைய அலுவலர் குழந்தை ஆனந்தன், துணை நிலை அலுவலர் ராஜராஜன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வக்குமாரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன், நகர செயலாளர் ஆனந்தன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். மேலும் 26 பேருக்கு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் எந்திரங்களையும் அவர் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X