என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் படுகாயமடைந்தவர் மரணம்
Byமாலை மலர்17 Sep 2018 1:12 PM GMT (Updated: 17 Sep 2018 1:12 PM GMT)
குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த மோர்தானா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
கடந்த 11-ந் தேதி காலை கோவிந்தசாமி மற்றும் அவரது தம்பி குப்புசாமி (50) மற்றும் சிலர் மீன் பிடிப்பதற்காக மோர்தானா அணை பகுதியில் ஓரமாக சென்றனர். அப்போது, காட்டிற்குள் இருந்து வந்த ஒற்றை யானை பிளியறியபடி அவர்களை விரட்டியது. இதில் யானை தாக்கியதில் கோவிந்தசாமி படுகாயமடைந்தார்.
அவருக்கு மார்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை உடன்வந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோவிந்தசாமி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X