என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் கடத்தல் நாடகமாடிய மாணவன்
Byமாலை மலர்19 Sep 2018 12:12 PM GMT (Updated: 19 Sep 2018 12:12 PM GMT)
சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாத மாணவன் தன்னை கடத்தியதாக பெற்றோரிடம் கடத்தல் நாடகம் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் கோட்டை அபிப்தெரு பகுதியை சேர்ந்தவர் செஸ்ராஜ். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் அந்த பகுதியில் பூட்டு கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் நரேஷ் (வயது 16). ராஜஸ்தான் மாநிலத்தில் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலத்திற்கு அவரை அழைத்து வந்த பெற்றோர் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர். தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு பள்ளி பேருந்தில் சென்று வந்தார்.
இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு செல்வதற்காக புறப்பட்டு வீட்டருகே நின்றார். அப்போது திடீரென சத்தம் போட்டபடி வீட்டை நோக்கி பதறியடித்த படி ஓடிவந்தார்.
பின்னர் 7 பேர் சேர்ந்து வாயை பொத்தி தன்னை கடத்தி செல்ல முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்து விட்டதாகவும் ஏங்கி, ஏங்கி அழுத படி பெற்றோரிடம் கூறினார்.அவரது கை மற்றும் நெஞ்சு பகுதிகளில் கத்தியால் கிழித்ததாகவும், இதனால் அவரது உடம்பில் இருந்து இருந்து ரத்தம் வடிவதாகவும் கூறினார்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே 7 பேர் கடத்த முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து வந்ததாகவும் மாணவர் கூறியதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் மாணவனை தனியாக அழைத்து விசாரித்தனர்.
அப்போது மாணவர் பரபரப்பு தகவல்களை கூறினார். அதன் விவரம் வருமாறு:
ராஜஸ்தானில் படித்து வந்த நரேசுக்கு இங்குள்ள பள்ளியில் படிக்க விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி இங்கு அழைத்து வந்து ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர்.
இதனால் பள்ளிக்கு போக விருப்பம் இல்லாத நரேஷ் புத்தகப்பையை வீசி எறிந்து விட்டு தனது நகத்தால் கை மற்றும் நெஞ்சு பகுதியில் கிழித்து விட்டு மர்ம நபர்கள் கடத்தி சென்று கத்தியால் கிழித்ததாக பெற்றோரிடம் கூறியதும் தெரிய வந்தது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மாணவரின் விருப்பத்தை கேட்டு அதற்கு தகுந்தாற்போல செயல்படுமாறு பெற்றோருக்கு அறிவுரை கூறினர். இந்த சம்பவம் இன்று சேலம் கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
சேலம் கோட்டை அபிப்தெரு பகுதியை சேர்ந்தவர் செஸ்ராஜ். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் அந்த பகுதியில் பூட்டு கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் நரேஷ் (வயது 16). ராஜஸ்தான் மாநிலத்தில் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலத்திற்கு அவரை அழைத்து வந்த பெற்றோர் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர். தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு பள்ளி பேருந்தில் சென்று வந்தார்.
இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு செல்வதற்காக புறப்பட்டு வீட்டருகே நின்றார். அப்போது திடீரென சத்தம் போட்டபடி வீட்டை நோக்கி பதறியடித்த படி ஓடிவந்தார்.
பின்னர் 7 பேர் சேர்ந்து வாயை பொத்தி தன்னை கடத்தி செல்ல முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்து விட்டதாகவும் ஏங்கி, ஏங்கி அழுத படி பெற்றோரிடம் கூறினார்.அவரது கை மற்றும் நெஞ்சு பகுதிகளில் கத்தியால் கிழித்ததாகவும், இதனால் அவரது உடம்பில் இருந்து இருந்து ரத்தம் வடிவதாகவும் கூறினார்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே 7 பேர் கடத்த முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து வந்ததாகவும் மாணவர் கூறியதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் மாணவனை தனியாக அழைத்து விசாரித்தனர்.
அப்போது மாணவர் பரபரப்பு தகவல்களை கூறினார். அதன் விவரம் வருமாறு:
ராஜஸ்தானில் படித்து வந்த நரேசுக்கு இங்குள்ள பள்ளியில் படிக்க விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி இங்கு அழைத்து வந்து ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர்.
இதனால் பள்ளிக்கு போக விருப்பம் இல்லாத நரேஷ் புத்தகப்பையை வீசி எறிந்து விட்டு தனது நகத்தால் கை மற்றும் நெஞ்சு பகுதியில் கிழித்து விட்டு மர்ம நபர்கள் கடத்தி சென்று கத்தியால் கிழித்ததாக பெற்றோரிடம் கூறியதும் தெரிய வந்தது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மாணவரின் விருப்பத்தை கேட்டு அதற்கு தகுந்தாற்போல செயல்படுமாறு பெற்றோருக்கு அறிவுரை கூறினர். இந்த சம்பவம் இன்று சேலம் கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X