என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருச்சியில் இளம்பெண் உள்பட 3 பேர் மாயம்
Byமாலை மலர்26 Sep 2018 1:01 PM GMT (Updated: 26 Sep 2018 1:01 PM GMT)
திருச்சியில் வேலைக்கு சென்ற இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் அறிவரசி (வயது 25). திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக வேலை செய்து வருகிறார். தினமும் பஸ்சில் மருத்துவமனைக்கு வந்து செல்வது வழக்கம்.
சம்பவதன்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் பணி புரிந்து கொண்டிருந்த போது அறிவரசி திடீரென்று மாயமாகியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரன் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி உறையூர் மருதாண்டாக்குறிச்சி சந்தோஷ்நகரை சேர்ந்தவர் தங்கவேல் (65). இவர் அதே பகுதியில் உள்ள தனது மகள் ராஜேஸ்வரி வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அதிகாலையில் வீட்டை வீட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து உறையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகாநகர் இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 22). திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச்சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X