search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கடலூரில் என்ஜினீயரிங் மாணவர் மாயம்
    X

    கடலூரில் என்ஜினீயரிங் மாணவர் மாயம்

    கடலூரில் என்ஜினீயரிங் மாணவர் மாயமானது குறித்து அவரது சித்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவரை தேடி வருகிறார்கள்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் கிள்ளை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 19). இவர் கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரிக்கு சென்று வருவதாக தனது உறவினர்களிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் கார்த்திகேயனை தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து கார்த்திகேயனின் சித்தி தீபா கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×