search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி
    X

    பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி

    பாலக்கோடு அருகே பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
    காரிமங்கலம்

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காவப்பட்டி கிராமத்தை சேர்ந்த தேவன் என்பவரது மகன் வாசுதேவன் (வயது24). லாரி டிரைவர்.

    அதே பகுதியை சேர்ந்த மகாதேவன் மகள் ஜெயப்பிரியா (வயது21) பட்டதாரி. இருவரும் கடந்த 7 வருடமாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இருவரது பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் கடந்த 21-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தருமபுரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பண்டி கங்காதரிடம் மனு அளித்தனர்.

    அவருடைய உத்தரவின் பேரில், பாலக்கோடு இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் இரண்டு பேரின் பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து வைத்தனர். இருவரின் பெற்றோர்களும் ஒப்புக் கொண்ட நிலையில் வாசுதேவனுடன் ஜெயப்பிரியாவை அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×