search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டுவில் தரமான சாலை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    வத்தலக்குண்டுவில் தரமான சாலை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    வத்தலக்குண்டுவில் தரமான சாலை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு காந்திநகர் மெயின்ரோடு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் குடிநீர் பைப் அமைக்க பள்ளம் தோண்டி மண், ஜல்லி கற்களை சாலையின் மையப்பகுதியிலேயே கொட்டியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

    மேலும் ஆட்டோக்கள் அதிகளவு ஆட்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வருவதால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் அவரச கால வாகனங்களும் செல்ல சிரமம் அடைவதால் உயிர்பலி ஏற்படுகிறது. இதனை கண்டித்து வத்தலக்குண்டு காந்திநகர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போஸ்ட் ஆபிஸ் அருகே பேரணியை சக்திகிளினிக் தலைமை டாக்டர் தெய்வேந்திரன் தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பத்திர எழுத்தர் சங்க தலைவர் சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர். பேரணி பேரூராட்சி அலுவலகம் வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சங்கத் தலைவர் ஜெக நாதன், செயலாளர் அழகர் சாமி, பொருளாளர் சுப்பிரமணி, துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் சூரியமூர்த்தி, ராஜமுருகன், பேபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×