search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி - கைதான கல்லூரி மாணவர் சிறையில் அடைப்பு
    X

    இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி - கைதான கல்லூரி மாணவர் சிறையில் அடைப்பு

    வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையம் காரக்குட்டை செல்லும் வழியில் 27 வயது மதிக்கதக்க இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு இளம் பெண்ணிடம் தண்ணீர் தருமாறு கேட்டார். அப்பெண் தண்ணீர் எடுத்துவர சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் திடீரென கதவை சாத்தினார்.

    பின்னர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் சத்தம் போட்டார். உடனே ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண் தலையை பிடித்து சுவற்றில் அடித்தார். மேலும் சரமாரியாக தாக்கினார்.

    இளம்பெண் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்ததும் வாலிபர் வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சூலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் பட்டணம் பகுதியை சேர்ந்த விமல் ஆனந்த் (19) என்பதும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×