என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி - கைதான கல்லூரி மாணவர் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்28 Sep 2018 12:25 PM GMT (Updated: 28 Sep 2018 12:25 PM GMT)
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சூலூர்:
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையம் காரக்குட்டை செல்லும் வழியில் 27 வயது மதிக்கதக்க இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு இளம் பெண்ணிடம் தண்ணீர் தருமாறு கேட்டார். அப்பெண் தண்ணீர் எடுத்துவர சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் திடீரென கதவை சாத்தினார்.
பின்னர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் சத்தம் போட்டார். உடனே ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண் தலையை பிடித்து சுவற்றில் அடித்தார். மேலும் சரமாரியாக தாக்கினார்.
இளம்பெண் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்ததும் வாலிபர் வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சூலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் பட்டணம் பகுதியை சேர்ந்த விமல் ஆனந்த் (19) என்பதும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையம் காரக்குட்டை செல்லும் வழியில் 27 வயது மதிக்கதக்க இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு இளம் பெண்ணிடம் தண்ணீர் தருமாறு கேட்டார். அப்பெண் தண்ணீர் எடுத்துவர சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் திடீரென கதவை சாத்தினார்.
பின்னர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் சத்தம் போட்டார். உடனே ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண் தலையை பிடித்து சுவற்றில் அடித்தார். மேலும் சரமாரியாக தாக்கினார்.
இளம்பெண் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்ததும் வாலிபர் வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சூலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் பட்டணம் பகுதியை சேர்ந்த விமல் ஆனந்த் (19) என்பதும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X