search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
    X

    ராமநாதபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    ராமநாதபுரம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே அந்த நேரத்தில் ராமநாதபுரம் நகராட்சி பகுதிகள், புதிய, பழைய பஸ் நிலையங்கள், அரண்மனை, கேணிக்கரை, பாரதி நகர், சக்கரக்கோட்டை, கலெக்டர் அலுவலக வளாகப் பகுதிகள், பட்டினம் காத்தான், அச்சுந்தன்வயல், சின்னக்கடை மற்றும் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல் ராமநாதபுரம் துணை மின் நிலையத்துக் குட்பட்ட திருப்புல் லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே. நகர், பசும் பொன்நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது..

    இதேபோல் ரெகுநாதபுரம் துணை மின் நிலைய பகுதியில் உள்ள ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, காரான், வண்ணான்குண்டு, தினைக் குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனா மரைக்கான் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    தேவிபட்டினம் துணை மின் நிலையத்தில் காட்டூ ரணி, அண்ணா பல்கலைக் கழகம், தேவிபட்டினம், பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    ஆர்.காவனூர் துணை மின் நிலையத்தில்: தொருவளூர், முதலூர், கிளியூர், ஆர்.காவனூர், தேத்தாங்கால், குளத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×