search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் பலத்த மழை- குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    கோவையில் பலத்த மழை- குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    கோவை மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கோவை:

    கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    நேற்று இரவு கோவை ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், கணபதி உள்ளிட்ட மாநகர் பகுதிகளிலும், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    Next Story
    ×