search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி அருகே தனக்கு தானே கத்தியால் குத்தி விவசாயி தற்கொலை
    X

    பழனி அருகே தனக்கு தானே கத்தியால் குத்தி விவசாயி தற்கொலை

    நிலத்தை விற்பது குறித்த தகராறில் தனக்கு தானே கத்தியால் குத்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

    பழனி:

    பழனி அருகே வத்தகவுண்டன்வலசை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 75). இவருக்கு 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை விற்பது குறித்து மகன்களிடம் கடந்த மாதம் 29 ம் தேதி பேசினார். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செல்லமுத்து தன்னிடம் இருந்த கத்தியால் தனக்குதானே குத்தி கொண்டார்.

    வயிற்றில் குத்தி கொண்டதில் கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இச்சம்பவம் தொடர்பாக ஆயக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்

    Next Story
    ×