search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகரை பதவி நீக்க கோரி கருணாஸ் மனு  - திமுக ஆதரவு கொடுத்தால் சட்டசபையில் விவாதம் நடக்கும்
    X

    சபாநாயகரை பதவி நீக்க கோரி கருணாஸ் மனு - திமுக ஆதரவு கொடுத்தால் சட்டசபையில் விவாதம் நடக்கும்

    சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் கருணாசுக்கு ஆதரவு கொடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். #Karunas #Speaker
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார்.

    இவர் அ.தி.மு.க. குறித்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் விமர்சனம் செய்ததால் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கருணாஸ் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கும்படி கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த மனு சபாநாயகரின் ஆய்வில் உள்ளது.

    இதற்கிடையே ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள கருணாஸ், சபாநாயகரை பதவி நீககம் செய்யகோரி தனது வக்கீல்கள் மூலம் சட்டசபை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

    இந்த மனு சட்டசபை கூடும்போது முதல் அஜண்டாவில் வைக்கப்படும். 35 பேர் மெஜாரிட்டி இருந்தால் விவாதம் நடைபெறும். இல்லை என்றால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    இதுகுறித்து சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது:-

    சபாநாயகரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தனித் தீர்மானம் யார் கொண்டுவர நினைத்தாலும் எழுத்துப் பூர்வமாக 14 நாட்களுக்குள் முன்னறிவிப்புடன் சட்டசபை செயலாளருக்கும், அதன் பிரதியை சபாநாயகரிடமும் கொடுக்க வேண்டும்.

    இதை சட்டசபை கூடும்போது முதல்நாள் பட்டியலில் சேர்ப்போம். சட்டசபையில் இதற்கு 35 உறுப்பினர்களுக்கு குறையாமல் உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தரவேண்டும். போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்றால் அனுமதி மறுக்கப்படும்.

    உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் 7 நாட்களுக்குள் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும். அப்போது துணை சபாநாயகர் இந்த சபையை நடத்துவார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



    சட்டசபையில் தி.மு.க.வுக்கு 87 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் கருணாசுக்கு ஆதரவு கொடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இதுபற்றி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனிடம் கேட்டதற்கு கருணாஸ் தி.மு.க.விடம் ஆதரவு கேட்டால் அந்த நேரத்தில் கட்சி மேலிடம் இதை பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார். #Karunas #Speaker

    Next Story
    ×