என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
விபத்தில் மனைவி பலியான அதிர்ச்சியில் கணவரும் இறந்த பரிதாபம்
Byமாலை மலர்4 Oct 2018 11:43 AM GMT (Updated: 4 Oct 2018 11:43 AM GMT)
அன்னூர் அருகே விபத்தில் மனைவி பலியான அதிர்ச்சியில் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அன்னூர்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி பாலாமணி (55).
சம்பவத்தன்று பாலாமணி தனது தாயார் மாராத்தாளை அழைத்துக்கொண்டு மொபட்டில் அன்னூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். மொபட் பூலுவபாளையம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வேன் மொபட் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த பாலாமணி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கால்களில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய மாராத்தாளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் சிறுமுகையை சேர்ந்த ஞானசேகரன் (23) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்து பாலாமணியின் கணவர் சண்முகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஒரு காரில் உறவினர்களுடன் புறப்பட்டு அன்னூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். கார் பொகளூர் அருகே வந்த போது சண்முகத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.
இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக சண்முகத்தை அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் சண்முகத்தின் உடலை அவரது உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். விபத்தில் இறந்த பாலாமணியின் உடல் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கணவன்-மனைவி 2 பேரின் உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரேயான் நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சண்முகத்தின் மகன் ஸ்ரீதர் ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். அவர் வந்த உடன் உடல்கள் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். #tamilnews
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி பாலாமணி (55).
சம்பவத்தன்று பாலாமணி தனது தாயார் மாராத்தாளை அழைத்துக்கொண்டு மொபட்டில் அன்னூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். மொபட் பூலுவபாளையம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வேன் மொபட் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த பாலாமணி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கால்களில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய மாராத்தாளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் சிறுமுகையை சேர்ந்த ஞானசேகரன் (23) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்து பாலாமணியின் கணவர் சண்முகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஒரு காரில் உறவினர்களுடன் புறப்பட்டு அன்னூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். கார் பொகளூர் அருகே வந்த போது சண்முகத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.
இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக சண்முகத்தை அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் சண்முகத்தின் உடலை அவரது உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். விபத்தில் இறந்த பாலாமணியின் உடல் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கணவன்-மனைவி 2 பேரின் உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரேயான் நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சண்முகத்தின் மகன் ஸ்ரீதர் ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். அவர் வந்த உடன் உடல்கள் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X