search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அரியாங்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் கீழே விழுந்து பலி
    X

    அரியாங்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் கீழே விழுந்து பலி

    அரியாங்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் அருகே உள்ள தமிழக பகுதியான நல்லப்பரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 33). விவசாயி. இவரது மனைவி கலைவாணி.

    அன்பு கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீராம்பட்டினம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டு ஓரம் நின்று கொண்டிருந்த காரில் மோதினார்.

    இதில், படுகாயம் அடைந்த அன்புவை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அன்பு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×