என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
கம்பம் பகுதியில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் சித்ரவதை
தேனி:
கம்பம் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி மகள் மதுமிதா (வயது26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் புவனேஷ் என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 40 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. திருமணமான சில நாட்களிலேயே மதுமிதாவிடம் மேலும் ரூ.20 லட்சம் வாங்கி வரச்சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.
இதில் ரூ10 லட்சத்தை தாய் வீட்டில் இருந்து மதுமிதா வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ரூ.10 லட்சத்தை வாங்கி வரச்சொல்லி உள்ளனர்.
தாமதமானதால் புவனேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுமிதாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். சம்பவத்தன்று புவனேஷ், மதுமிதாவை தாக்கி மிரட்டி உள்ளார்.
இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் மதுமிதா புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் புவனேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்