என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாராபுரம் அருகே வீட்டு மனை வரையறைக்கு மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்
தாராபுரம்:
தாராபுரம் - உடுலை சாலையில் அனுமதியற்ற வீட்டு மனைகளுக்கு வீட்டு மனை வரையறை படுத்தும் முகாம் நடைபெற்றது.
இதில் சேலம் மண்டல இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.
தாராபுரம் நகராட்சி மற்றும் குண்டடம், கொளத்துப்பாளையம், சின்னக்கா பாளையம், ருத்ராபதி, மூலனூர் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 200 பேர் மனு அளித்தனர்.
மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 1,200 மனுக்களுக்கு மனை அனுமதி வழங்கப்பட்டது.
இந்த முகாமில் கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த நாகராஜன் (49) மனு அளிக்க வந்தார். அவர் தாராபுரத்தில் உள்ள தனது வீட்டு மனைக்கு அனுதிக்காக வந்து இருந்தார்.
மனு அளிக்க வந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். நாகராஜனும் அவர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தாராபுரம் விரைந்து வந்தனர். நாகராஜன் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது தொடர்பாக தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்