search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தாமதமாக வீட்டுக்கு வந்ததால் குடும்பத்தகராறு- வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    தாமதமாக வீட்டுக்கு வந்ததால் குடும்பத்தகராறு- வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    தாமதமாக வீட்டுக்கு வந்த தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் காதல் திருமணம் செய்த மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

    கோவை:

    கோவை வீரபாண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 26). தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயன் ரிபானா பாத்திமா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் ரத்தினபுரி சாஸ்த்திரி நகரில் வசித்தனர்.

    இந்நிலையில் கார்த்திகேயன் வேலைக்கு செல்லாமல் இருந்தார். அவரது மனைவி தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று இரவு கார்த்திகேயன் தாமதமாக வீட்டிற்கு வந்தார். ஏன் வீட்டுக்கு வர இவ்வளவு நேரம் என்று ரிபானா பாத்திமா கேட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இன்று காலை கார்த்திகேயன் தூக்கில் தொங்கினார். இதைப்பார்து அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    தற்கொலை குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×