search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்- திருநாவுக்கரசர்
    X

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்- திருநாவுக்கரசர்

    சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்ட விசயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #SC #Sabarimala
    மதுரை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கு வேண்டியவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் ரூ. 4 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதை விசாரித்த கோர்ட்டு போதிய ஆதாரம் இல்லை என்று காவல்துறை தாக்கல் செய்ததை ஏற்க மறுத்து விட்டது.

    மேலும் ஊழல் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றியது. சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தவுடன் முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.


    முதல்வரை எவ்வாறு சி.பி.ஐ. விசாரணை செய்ய முடியும்? எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக பதவி விலக வேண்டும்.

    இதற்கு அமைச்சர்கள் அந்த கட்சி அப்படி செய்தது? இப்படி செய்தது? என்று அடுத்த கட்சியை குறை கூறக்கூடாது.

    சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்ட விசயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். ஆனால் சபரிமலை கோவிலுக்கு ஒரு மரபு உள்ளது. அதுவும் காக்கப்பட வேண்டும். நீதிமன்றம் சென்று தேவசம் போர்டு தனது உரிமையை பெற வேண்டும்.

    இதற்கிடையே சபரிமலைக்கு செல்லும் பெண்களை தாக்குவது போன்ற செயலில் ஈடுபடுவதை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் நிறுத்த வேண்டும்.

    கமலை பற்றி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சப்பாணி என்று கூறியது தவறு. அரசியலில் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

    தினகரன்-காங்கிரஸ் கூட்டணி பற்றி கட்சிகள் எந்த ஒரு அறிவிப்பும் தரவில்லை. நாங்கள் தற்போது ஒரு கூட்டணியில் இருக்கும் போது, வேறு கூட்டணி எப்படி வைக்க முடியும்? கமல்ஹாசன், ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரசுடன் இணைவதாக கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #Sabarimala #SupremeCourt
    Next Story
    ×