search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலையாத்தி காடுகளில் பறவைகளை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
    X

    அலையாத்தி காடுகளில் பறவைகளை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

    முத்துப்பேட்டை அருகே அலையாத்தி காடுகளில் பறவைகளை வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினர் ரூ.15 ஆயிரம் அபராதமம் விதித்துள்ளனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கடைசி எல்லையான அலையாத்திக்காட்டை ஒட்டியுள்ள காப்புக்காடு அருகே சிலர் பறவைகளை வேட்டையாடுவதாக முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் வந்தது. 

    இதனையடுத்து வன அலுவலர் தாகீர் அலி தலைமையில் வனவர் செல்லையன், வனக் காப்பாளர் மாரிமுத்து, வனவர் ஜீவாராமன், வன காவலர் சின்னப்பா மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சென்று கண்காணித்தனர். இதில் அப்பகுதியில் வலை விரித்து பறவைகளை பிடித்துக் கொண்டிருந்த 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து வலை மற்றும் 10 கொசு உள்ளான் பறவைகளை பறிமுதல் செய்தனர். 

    இதில் 8 கொசு உள்ளான் பறவைகள் இறந்திருந்தது. 2 பறவைகள் மட்டும் உயிருடன் இருந்தது. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூவரும் முத்துப்பேட்டை அடுத்த கீழவாடியக்காட்டை சேர்ந்த சரவணன்(வயது 44), முத்துக்குமார்(39), விஜயகுமார்(38) என்பது தெரியவந்தது. 

    இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர் வன சட்டப்படி அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 15 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்து விடுவித்தனர். பிறகு உயிருடன் மீட்ட 2 பறவைகளையும் வனத்துறையினர் பறக்கவிட்டனர்.
    Next Story
    ×