search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நெய்வேலியில் கடையில் பணம் திருட்டு
    X

    நெய்வேலியில் கடையில் பணம் திருட்டு

    நெய்வேலியில் நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகே பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் பேன்சிகடை நடத்தி வருபவர் ஞானராஜ். இவர் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தான். பின்பு அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.

    காலையில் ஞானராஜ் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 

    இதுகுறித்து ஞானராஜ் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×