என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் கொள்ளை
மதுரை:
மதுரை வண்டியூர் மாந்தோப்பு ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவரது வீட்டில் நேற்று மின்தடை ஏற்பட்டது. இதனால் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் இரவில் தங்கினார்.
இன்று காலை ஆனந்த் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் ஆனந்த் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
கரிமேடு ரெயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் ஜானகிராமன். இவருடைய மனைவி சரஸ்வதி (56). இவர் ஜவுளி கடைக்கு சென்று விட்டு மகனுடன் நேற்று இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 2 பேர் சரஸ்வதி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்