என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மாமல்லபுரம்-கல்பாக்கத்தில் புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
மாமல்லபுரம்:
பையனூரை அடுத்த பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கும் திருப்போரூரை அடுத்த மானாம்பதியை சேர்ந்த கவுசல்யாவுக்கும் (22) கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி திருமணம் நடந்தது.
நேற்றுமுன்தினம் கவுசல்யாவின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தந்தையை பார்த்த அழைத்து செல்லும்படி கவுசல்யா, கணவர் அசோக்குமாரிடம் கூறினார். ஆனால் அவர் மனைவியை அழைத்து செல்லவில்லை.அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கவுசல்யா கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் ஆன 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாமல்லபுரம் போலீசாரும் செங்கல்பட்டு ஆர்.டி.ஓவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் குமுதவல்லி. இவர் பி.சி.ஏ. படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த குமுதவல்லி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்