என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சென்னையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Byமாலை மலர்31 Oct 2018 12:52 PM GMT (Updated: 31 Oct 2018 12:52 PM GMT)
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். #vigilanceofficialsraid #TeynampetDMSpremises
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ். எனப்படும் தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் தலைமை அலுவலக கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் மற்றும் அந்த துறை சார்ந்த இதர அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த அலுவலகங்களில் தீபாவளியை முன்னிட்டு அதிகாரிகள் மாமூல் வசூலில் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து, இன்று மாலை தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் அலுவலகம் அமைந்துள்ள இரண்டாவது மாடி பகுதிக்கு சுமார் 10 லஞ்ச ஒழிப்புத்துறை வந்தனர். அந்த மாடிக்கு செல்லும் கதவை இழுத்து மூடிய அதிகாரிகள் அங்குள்ள அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #vigilanceofficialsraid #TeynampetDMSpremises
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X