search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே தடுப்பணை சேற்றில் சிக்கி தொழிலாளி பலி
    X

    கோவை அருகே தடுப்பணை சேற்றில் சிக்கி தொழிலாளி பலி

    கோவை அருகே தடுப்பணை சேற்றில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ரோயாகவுண்டனூரில் உள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென சேறு நிறைந்த பகுதிக்கு சென்றார். சேற்றில் கால் சிக்கிக் கொண்டதால் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடடினயாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேற்றில் சிக்கி இறந்த தங்கராஜின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×