search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே ஜாமீனில் வந்த பெண் கார் மோதி பலி
    X

    திருமங்கலம் அருகே ஜாமீனில் வந்த பெண் கார் மோதி பலி

    திருமங்கலம் அருகே ஜாமீனில் வந்த பெண் ரோட்டை கடக்க முயன்றபோது கார் மோதி பலியானார்.

    பேரையூர்:

    உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 54).

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து திருமங்கலம் போலீஸ் நிலைய காவலில் அடைக்கப்பட்டு இருந்த பாண்டியம்மாளை நேற்று போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

    இதனையடுத்து பாண்டியம்மாள் வீட்டுக்கு செல்வதற்காக திருமங்கலம்- கப்பலூர் இடையே உள்ள 4 வழிச்சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அவர் ரோட்டை கடக்க முயன்ற போது விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாண்டியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சேலம் மாவட்டம், ஆத்தூர், அரியமுத்து பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×