என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் அருகே ஜாமீனில் வந்த பெண் கார் மோதி பலி
பேரையூர்:
உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 54).
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து திருமங்கலம் போலீஸ் நிலைய காவலில் அடைக்கப்பட்டு இருந்த பாண்டியம்மாளை நேற்று போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.
இதனையடுத்து பாண்டியம்மாள் வீட்டுக்கு செல்வதற்காக திருமங்கலம்- கப்பலூர் இடையே உள்ள 4 வழிச்சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அவர் ரோட்டை கடக்க முயன்ற போது விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாண்டியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சேலம் மாவட்டம், ஆத்தூர், அரியமுத்து பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்