search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் புதிய டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் உடைப்பு- 2 ஊழியர்கள் மீது தாக்குதல்
    X

    திருவள்ளூரில் புதிய டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் உடைப்பு- 2 ஊழியர்கள் மீது தாக்குதல்

    திருவள்ளூரில் புதிய டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்களை உடைத்து 2 ஊழியர்களை தாக்கியது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிய டாஸ்மாக் கடை அமைக்கும் பணி தொடங்கியது.

    இதற்கு பெரியகுப்பம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டால், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாவர் என கூறினார்கள்.

    இதனால் இந்த கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று இந்த இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கபட்டது.

    இதையடுத்து பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் சிலர் கடைக்கு சென்று விற்பனையாளர்கள் ஆனந்த், பாபு ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். வேலை செய்யவிடாமல் தடுத்து கடையில் இருந்த மதுபான பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×