search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் மகள், மகனுடன் இளம்பெண் மாயம்
    X

    கோவையில் மகள், மகனுடன் இளம்பெண் மாயம்

    கோவையில் மகள், மகனுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வெரைட்டி ஹால் தாமஸ் வீதி காந்தி சந்து பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி நாகராணி (வயது 25). இவர்களுக்கு அர்ச்சிஷா (5) என்ற மகளும், அபிலாஷ் (4) என்ற மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று நாகராணி மகன், மகளை ஆர்.ஜி. வீதியில் டியூசனுக்கு அழைத்துச்செல்வதாக கணவரிடம் கூறிச்சென்றார். வெகுநேரமாகியும் 3 பேரும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், தோழி வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனையடுத்து செந்தில்குமார் வெரைட்டிஹால் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன், மகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×