என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
எடப்பாடி அருகே காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, கூடக்கல் பகுதியை சேர்ந்த அம்மாசி கூலித்தொழிலாளி இவரது மகள் இந்துமதி (20), டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். எடப்பாடியை அடுத்த தேவூர் கோரைக்காடு பகுதியை சேர்ந்த சித்தன் மகன் மோகன்ராஜ்(22). இவர் தேவூர் பேரூராட்சியில் பிலம்பராக பணிசெய்து வருகிறார்.
இந்நிலையில் கூடக்கல் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த மோகன்ராஜிற்கு, இந்துமதியுடன் நட்பு ஏற்பட்டு அவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்துமதியின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில் அவரை கண்டித்துள்ளனர்.
இதனை அடுத்து தனது நிலை குறித்து இந்துமதி தனது காதலன் மோகன்ராஜிடம் கூறவே, அவரை மோகன்ராஜ் பவானி பகுதியில் உள்ள ஓர் கோவிலுக்கு அழைத்து சென்று தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அவர்களின் பெற்றோர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர், பாதுகாப்பு கேட்டு பூலாம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து இருவரின் பெற்றோர்களை அழைந்து சமாதானம் செய்த பூலாம்பட்டி போலீசார் அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை யாரும் துன்புறுத்தக்கூடாது என கூறி அனுப்பி வைத்தனர். இளம்ஜோடிகள் இருவரும் காவல்துறை அலுவலர்களிடம் ஆசி பெற்று சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்