search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மாணவி ஜீவிதா நிலாசினி பிணமாக கிடக்கும் காட்சி
    X
    மாணவி ஜீவிதா நிலாசினி பிணமாக கிடக்கும் காட்சி

    செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

    பொள்ளாச்சி அருகே செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் கை நரம்பை அறுத்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி வெங்கடேசா காலனியை சேர்ந்தவர் சசிகுமார். பெயிண்டர்.இவரது மகள் ஜீவிதா நிலாசினி (18). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்தார். அப்போது செல்போனை வெகுநேரம் உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் நித்யா கண்டித்தார். மேலும் செல்போனையும் பிடுங்கி கொண்டதாக தெரிகிறது.

    பின்னர் தாய் வெளியே சென்று விட்டார். மாணவி ஜீவிதா நிலாசினி மட்டும் வீட்டில் இருந்தார்.

    தாய் திட்டியதால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் திடீரென தனது கை நரம்பை கத்தியால் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×