search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திண்டுக்கல் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய கல்வி அதிகாரி
    X

    திண்டுக்கல் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய கல்வி அதிகாரி

    திண்டுக்கல் அருகே உதவி தொடக்க கல்வி அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள வாழைக்காய்பட்டி முத்தமிழ்நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவர் வேடசந்தூர் வட்டார உதவி தொடக்க கல்வி அதிகாரியாக உள்ளார். இவருக்கு ஜெயக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    பிரபாகரன் அதிக இடங்களில் சீட்டு போட்டு அந்த பணத்தை எடுத்து செலவு செய்து விட்டார். இதனால் அந்த பணத்தை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

    பணம் கேட்டு அவர்கள் தொந்தரவு செய்யவே வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு தனது அறையில் தூக்குபோட்டுக் கொண்டார். இன்று காலையில் அவரது மனைவி எழுந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் கள் தெரிவித்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×