search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே செல்போனில் பேசுவதை கண்டித்ததால் இளம்பெண் மாயம்
    X

    தேனி அருகே செல்போனில் பேசுவதை கண்டித்ததால் இளம்பெண் மாயம்

    தேனி அருகே செல்போனில் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் மாயமானார்.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டிபட்டி வடக்கு ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை மகள் அமுதா(வயது14). இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு விரக்தி அடைந்தார்.

    வீட்டில் இருந்த அமுதா திடீரென மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சின்னத்துரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×