என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தங்குடியில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்24 Nov 2018 10:17 AM GMT (Updated: 24 Nov 2018 10:17 AM GMT)
உத்தங்குடியில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
மதுரை:
உத்தங்குடி வளர் நகரைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 51). மாட்டுத்தாவணியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், பீரோவில் இருந்த பணம், 2 பவுன் நகை, 4 செல்போன்களை திருடிக் கொண்டு தப்பினான்.
இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
மதுரை தெற்குவெளி வீதியில் பட்டாணி கோவில் தெற்கு சந்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (41). நேற்று இரவு இவர், தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
சத்தம் கேட்டு விழித்த சுப்பிரமணியன் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து தெற்குவாசல் போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் சிம்மக்கல் பச்சையா தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் முத்துமணி (21) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீரைத்துறை தாயுமானவர் நகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் மணிகண்டன் (23). நேற்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுப்பிரமணியபுரம் அரிஜன காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் திவாகரன் (20) என் பவர் வீட்டில் இருந்த 2 செல்போன்களை திருடினார்.
இது குறித்து கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் திவாகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தங்குடி வளர் நகரைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 51). மாட்டுத்தாவணியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், பீரோவில் இருந்த பணம், 2 பவுன் நகை, 4 செல்போன்களை திருடிக் கொண்டு தப்பினான்.
இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
மதுரை தெற்குவெளி வீதியில் பட்டாணி கோவில் தெற்கு சந்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (41). நேற்று இரவு இவர், தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
சத்தம் கேட்டு விழித்த சுப்பிரமணியன் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து தெற்குவாசல் போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் சிம்மக்கல் பச்சையா தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் முத்துமணி (21) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீரைத்துறை தாயுமானவர் நகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் மணிகண்டன் (23). நேற்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுப்பிரமணியபுரம் அரிஜன காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் திவாகரன் (20) என் பவர் வீட்டில் இருந்த 2 செல்போன்களை திருடினார்.
இது குறித்து கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் திவாகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X