search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் தந்தையை தாக்கிய மகன் கைது
    X

    போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் தந்தையை தாக்கிய மகன் கைது

    போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்து ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே செல்லம்பட்டி அடுத்துள்ள பேருஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது62). விவசாயியான இவருக்கு சொந்தமான 1 அரை ஏக்கர் நிலத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இவரது மகன் கோவிந்தசாமி (26). கடந்த 21-ந்தேதி அன்று அன்பழகன் தென்னந்தோப்பில் தேங்காய் பறித்து கொண்டிருந்தார். 

    அப்போது அங்கு வந்த கோவிந்தசாமி தனது தந்தையிடம் இது எனக்கு சொந்தமாக தென்னந்தோப்பு. அதனால் நீங்கள் இந்த தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்க கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த கோவிந்தசாமி தனது தந்தை என்று கூட பார்க்காமல் அருகில் கிடந்த கல்லை எடுத்து தாக்கினார். இதில் அன்பழகனுக்கு வலது கையில் பலத்தகாயம் ஏற்பட்டது. 

    இது குறித்து அன்பழகன் நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தந்தையை தாக்கிய கோவிந்தசாமியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×