search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஜாபர்கான்பேட்டையில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது
    X

    ஜாபர்கான்பேட்டையில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

    சென்னை ஜாபர்கான்பேட்டையில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள குடிநீர் சப்ளை செய்து வரும் நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர் சாமுவேல் சக்கரவர்த்தி. இவர் நேற்று மாலை நண்பருடன் காசி தியேட்டர் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மூன்று பேர் திடீரென சாமுவேல் சக்கரவர்த்தியை சரமாரியாக தாக்கி அவரிட மிருந்து செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து எம்.ஜி.ஆர். போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் செல்போன் பறித்து தப்பி சென்ற 3 பேரை கே.கே.நகர் பஸ் நிலையம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், மணிகண்டன் மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவன் என்பது தெரிந்தது. மேலும் 3 பேரும் பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். கார்த்திக் தற்போது நிபந்தனை ஜாமீனில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் மீது ஏற்கனவே எம்.ஜி.ஆர். நகர், ராமாபுரம் காவல் நிலையங்களில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது.

    Next Story
    ×