என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணம் எடுக்க உதவுவதாக நடித்து பெண்ணிடம் ரூ.37 ஆயிரம் கொள்ளை
Byமாலை மலர்28 Nov 2018 8:44 AM GMT (Updated: 28 Nov 2018 8:44 AM GMT)
விருகம்பாக்கத்தில் பணம் எடுக்க உதவுவதாக நடித்து பெண்ணின் கணக்கில் இருந்து 37ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:
விருகம்பாக்கம், வெங்கடேஷ் நகரைச் சேர்ந்தவர் நாராயணி (73). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
நாராயணி நேற்று முன்தினம் மாலை பணம் எடுப்பதற்காக அதே பகுதி காமராஜர் சாலை விநாயகம் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் நாராயணிக்கு பணம் எடுக்க உதவினார்.
பின்னர் நாராயணி வீட்டிற்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து நாராயணியின் செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.
அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து 37ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நாராயணி நேற்று வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது நாராயணி பணம் எடுத்த அதே ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கப்பட்டதும், அவரிடம் இருந்தது. மேலும் போலியான ஏ.டி.எம் கார்டு என்பது தெரியவந்தது.
பணம் எடுக்க உதவியவர் நாராயணியின் கணக்கில் இருந்து 37ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து நூதன முறையில் ஏமாற்றி பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலுமணி ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் பணத்தை எடுத்து தப்பி சென்றது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
விருகம்பாக்கம், வெங்கடேஷ் நகரைச் சேர்ந்தவர் நாராயணி (73). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
நாராயணி நேற்று முன்தினம் மாலை பணம் எடுப்பதற்காக அதே பகுதி காமராஜர் சாலை விநாயகம் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் நாராயணிக்கு பணம் எடுக்க உதவினார்.
பின்னர் நாராயணி வீட்டிற்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து நாராயணியின் செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.
அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து 37ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நாராயணி நேற்று வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது நாராயணி பணம் எடுத்த அதே ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கப்பட்டதும், அவரிடம் இருந்தது. மேலும் போலியான ஏ.டி.எம் கார்டு என்பது தெரியவந்தது.
பணம் எடுக்க உதவியவர் நாராயணியின் கணக்கில் இருந்து 37ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து நூதன முறையில் ஏமாற்றி பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலுமணி ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் பணத்தை எடுத்து தப்பி சென்றது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X